பகுப்பு:மாருதம் (வவுனியா)

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 5 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாருதம் இதழானது வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் வெளியீடாகும். வெளியீடு 2004ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஆரம்பிக்கப்பட்டு அரையாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர்கள் திரு.க.ஶ்ரீகணேசன் மற்றும் தமிழ்மணி அகளங்கன்.

இதழின் உள்ளடக்கத்தில் அட்டைப்பட அதிதி பக்கம் ஊடாக எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகளின் அறிமுகமும், வாழ்க்கைக் குறிப்பும் இடம்பெறுகிறது. இவற்றுடன் கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், சிறுகதைகள், வவுனியாவில் இடம்பெற்ற சமகால முக்கிய நிகழ்வு பற்றிய குறிப்புக்கள், நண்பர்கள் வட்டத்தின் விருது பெறுபவர் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றை தாங்கிய சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகையாக அமைந்துள்ளது.