வலைவாசல்:தமிழிலக்கணம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:27, 2 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, '''தமிழிலக்கணம்')
தமிழ் மொழியின் இலக்கணம் தொன்மையானது.இயற்கையானது. கணிதம் போன்று, பல வரையறைகளை உடையது. இன்றளவும், உயிர்ப்புடன் இருப்பதும் ஆகும்.எனவே, பல அயல்மொழி அறிஞர்களால், போற்றப்படுவதும் ஆகும்.
இலக்கு + அணம் என்பவை இணைந்து, இலக்கணம் உருவானது என்பர். இங்கு இலக்கு என்பது காரணம், வரைதல்,எழுதுதல் என்பனவற்றைக் குறிக்கிறது. அணம் என்றால், முறை என்பது பொருளாகும். தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, தமிழிலக்கணம் ஆகும்.