ஆளுமை:சீவகாருண்யம், இராமையா

From நூலகம்
Name சீவகாருண்யம்
Pages இராமையா
Birth
Place வேலணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவகாருண்யம், இராமையா வேலணையைச் சேர்ந்த கரம்பன் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமையா. இவர் சிறுகதைகளையும் சில கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் பள்ளி மாணவனாக இருக்கும் போது பத்திரிகையில் வெளிவந்த இவரது அக்கா என்ற முதற் கதை சிறந்த பாராட்டைப் பெற்றது.

"பூரணி" இதழின் இதழாசிரியர்களில் இவரும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் கற்கின்றபோது ஆறுகதைகள் என்ற அறுவர் கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டார். அலை, திசை ஆகிய ஏடுகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தது. இவர் எழுத்துலகில் வெங்கட்சாமிநாதனின் வாழையும் தாளையும் என்ற நூலிற்கான விமர்சனத்தை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 23