ஆளுமை:பாக்கியராசா, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாக்கியராசா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் கண்ணகை
பிறப்பு 1951.09.08
ஊர் அக்கரைப்பற்று
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாக்கியராசா, கணபதிப்பிள்ளை (1951.09.08 - ) அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் கண்ணகை. இவர் அக்கரைப்பற்று இ. கி. மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். அக்கரைப் பாக்கியன் என்னும் புனைபெயரைக் கொண்டவர்.

இவர் அக்கறை, பலாக்கனி (கவிதை நூல்கள்) இரணியன் வரை, கண்ணன் கருணை, போடியார் பொன்னம்பலம் (வடமோடிக் கூத்துக்கள்) நிம்மதி, புதுப்பெண்டாட்டி, நெஞ்சில் மூண்ட நெருப்பு, பாசத் துடிப்பு, வாழ்வின் ரகசியம், உறவைத் தேடி, பழகத் தெரிந்த மனமே, அன்னையின் அருள் (நாடகங்கள்) தயாரித்துள்ளார்.

இலங்கை வானொலியில் இவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளது. இவர் இலக்கியப் படைப்பு சார் அமைப்புக்களிலும் சமூக, சமய அமைப்புக்களிலும் பணி செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 126-127