ஆளுமை:சதாசிவம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம் கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் அன்னம்மா
பிறப்பு 1905.10.07
இறப்பு 1986.04.08
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம் கணபதிப்பிள்ளை வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் ஆரம்பக்கல்வியை வேலணையில் யாழ் வைதீஸ்வராக் கல்லூரியில் கற்று பின் தனது 18ஆவது வயதில் மலேசியா சென்று கோலம்பூர் பட்டினத்தின் முதன்மை வாய்ந்த மெதடிஸ் ஆண்கள் பாடசாலையில் இடைநிலை கல்வியை கற்றார். மலேசியாவின் பொது வேலைப்பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக இணைந்த இவர் தனது புத்தி கூர்மையினாலும் கடின உழைப்பாலும் விரைவான பதவி உயர்வு பெற்று (PWD) கட்டிடப் பிரிவின் பொறியியலாளராக உயர்ந்தார். பின் இவர் தனது 47ஆவது வயதில் சொந்த மண்ணுக்கு திரும்பி வேலணை கிராமச் சங்க தலைவராக இருந்து பல பாடசாலை கட்டடங்கள் கட்டியது, வேலணை வங்களாவடியை அழகுபடுத்தி அருள் கொடுத்து கொண்டிருக்கும் முருகன் ஆலயத்தை உருவாக்கியது போன்ற பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும் தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கும் கடலை பாலத்தால் இணைப்பதற்கு அமரர் வீ.ஏ.கந்தையாவுடன் இணைந்து இணைப்பு பாலத்தினை அமைத்தார். இதனால் தீவக மக்களின் போக்குவரத்து பெருந்துயர் துடைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 513-517