ஆளுமை:விஜயராணி, அருண்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 11 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விஜயராணி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயராணி
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1954.03.16
இறப்பு 2015.12.13
ஊர் உரும்பிராய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயராணி அருண் (1954.03.16 - 2015.12.13) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. 1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். தொடர்ந்து கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.

தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன என்ற இவரது வானொலி நாடகம், துணை என்ற பெயரில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக பி. விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார். அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.

இவரது சேவைக்காக மெல்பன் தமிழ்ச்சங்கத்தினால் 2005ஆம் ஆண்டுக்கான விருதை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 2023 பக்கங்கள் 11-18
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:விஜயராணி,_அருண்&oldid=177148" இருந்து மீள்விக்கப்பட்டது