ஆளுமை:முகம்மது சமீம், அகமதுபுள்ள
பெயர் | முகம்மது சமீம் |
தந்தை | அகமதுபுள்ள |
தாய் | நாச்சியா உம்மா |
பிறப்பு | |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது சமீம், அகமதுபுள்ள பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகமதுபுள்ளை; தாய் நாச்சியா உம்மா. லண்டன் மெட்ரி குலேசன் பரீட்சையில் சித்தி அடைந்த இவர் 1951இல் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் சேர்ந்து படித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். தொடர்ந்து 1953இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விப் பயின்று வரலாற்றுத்துறையில் B.A. சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். இவர் சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
இவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் என்ற நூல் பன்முக ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாகும். தொடர்ந்து இவர் எழுதிய படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற நூல் இலங்கைக் கவிஞர்களையும், சிறுகதை ஆசிரியர்களையும், ஆய்வாளர்களையும் பற்றிய கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகும். மேலும் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற இவரது நூலுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. தினகரன் பத்திரிகையிலும் ஞானம் சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 398 பக்கங்கள் 05-09