ஆளுமை:பூமணி, இராஜரட்ணம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூமணி இராஜர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூமணி இராஜரட்ணம்
தந்தை வேலுப்ப்பிள்ளை
தாய் இராசம்மா நாகம்மா
பிறப்பு 1928.01.12
இறப்பு 2013.04.14
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்றார். மேலும் திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் கற்று வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

இவர் கர்நாடக சங்கீத கச்சேரிகள், மெல்லிசைப் பாடல்கள், பண்ணிசைப் பாடல்கள் என பல நிகழ்ச்சிகளை வழங்கியதோடு வானொலியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய முருகன் ஆலயத்திலும் கச்சேரி செய்து அங்குள்ள மக்களாலும் பாராட்டப்பெற்றார்.

இவரது திறமைக்காக சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களையும் தமிழர் தகவல் எனும் விருதையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 75