ஆளுமை:பூமணி, இராஜரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூமணி, இராஜரட்ணம்
பிறப்பு 1928.01.12
இறப்பு 2013.04.14
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூமணி, இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றுத் திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகப் பயின்று வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தி பெற்று தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

இவர் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய முருகன் ஆலயத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்திப் பலராலும் பாராட்டப்பெற்றார்.

இவரது இசை ஆளுமையைக் கெளரவித்துச் சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 75