ஆளுமை:சுப்பிரமணியம், ஞானமுத்து (கவிஞர் ஞானமணியம்)

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம், ஞானமுத்து (கவிஞர் ஞானமணியம்)
தந்தை ஞானமுத்து
தாய் மாதம்மை
பிறப்பு 1935.09.20
இறப்பு 2015.05.31
ஊர் திருப்பழுகாமம், மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமுத்து சுப்பிரமணியம் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் ஞானமுத்து, மாதம்மை தம்பதியரின் மகனாக 1935 செப்டெம்பர், 20ல் பிறாந்தார். ஞானமணியம், ஜி. எஸ். மணியம் எனும் புனை பெயரை கொண்ட சுப்பிரமணியம் இலண்டன் பழந்தமிழ் கலை இணையத்தின் ஸ்தாபகரும், கிராமியக் கலைஞரும், கவிஞருமாவார்.

இவர் குருக்கள்மடம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தவர். காகித ஆலை தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தராகவும், களஞ்சியப் பொறுப்பாளராகவும், நிலைய அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் எழுத்தாளர், பதிப்பாளர், வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சமயத்தொண்டர், சமூகத் தொண்டர், சுயேட்சை மொழிபெயர்ப்பாளர் என பல் துறைகளில் பாண்டித்துவம் பெற்றிருந்தார்.

இவர் இருமரபுக் கூத்து, நாடகம், இசை என்பவற்றிலும் சாதனைகள் பல புரிந்துள்ளார். வாணி வழிபாடு, நூற்றி எட்டு போற்றிகள், நூற்றாண்டு பாமலர், பதிக்கொரு பாடல், இதயம் கவரும் இனிய பாடல்கள், சுவாமி நடராஜானந்தா அவர்களின் வரலாறு முதலான தலைப்புக்களில் இவர் தனது ப்டைப்புக்களை வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக லண்டனில் வசித்து வந்த இவர் இந்தியாவிற்கு சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு 2015 மே, 31ல் மதுரையில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 179