ஆளுமை:சுப்பிரமணியம், ஞானமுத்து (கவிஞர் ஞானமணியம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை ஞானமுத்து
தாய் மாதம்மை
பிறப்பு 1935.09.20
இறப்பு 2015.05.31
ஊர் மட்டக்களப்பு,திருப்பழுகாமம்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், ஞானமுத்து (1935.09.20- 2015.05.31) மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும் குருக்கள்மடம், இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர், கிராமியக் கலைஞர். இவரின் தந்தை ஞானமுத்து; இவரின் தாய் மாதம்மை. ஞானமணியம், ஜி. எஸ். மணியம் என்னும் புனைபெயரைக் கொண்ட இவர், இலண்டன் பழந்தமிழ்க் கலை இணையத்தின் ஸ்தாபகராவார். இவர் காகித ஆலைத் தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தராகவும் களஞ்சியப் பொறுப்பாளராகவும் நிலைய அதிகாரியாகவும் பணியாற்றியதுடன் எழுத்தாளர், பதிப்பாளர், வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், சமயத்தொண்டர், சமூகத் தொண்டர், சுயேட்சை மொழிபெயர்ப்பாளர் என பல் துறைகளில் பாண்டித்துவம் பெற்றிருந்தார்.

இவர் இருமரபுக் கூத்து, நாடகம், இசை என்பவற்றிலும் சாதனைகள் பல புரிந்துள்ளார். இவர் வாணி வழிபாடு, நூற்றி எட்டு போற்றிகள், நூற்றாண்டு பாமலர், பதிக்கொரு பாடல், இதயம் கவரும் இனிய பாடல்கள், சுவாமி நடராஜானந்தா அவர்களின் வரலாறு முதலான தலைப்புக்களில் தனது படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக லண்டனில் வசித்து வந்த இவர், இந்தியாவிற்குச் சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 179