ஆளுமை:சிவலிங்கம், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம், இரத்தினம் (மாஸ்டர் சிவலிங்கம்)
தந்தை இரத்தினம்
தாய் செல்லத்தங்கம்
பிறப்பு 1933.03.28
ஊர் மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினம் சிவலிங்கம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் எனும் இடத்தில் இரத்தினம், செல்லத்தங்கம் தம்பதியரின் மகனாக 1993 மார்ச், 28ல் பிறந்தார். சிவானந்த வித்தியாலயம், அரசினர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் புலவர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை , பண்டித வித்துவான் வி. சீ. கந்தையா ஆகியோரின் மாணவனுமாவார்.

இவர் தினமணி, சிந்தாமணி பத்திரிகைகளின் துணைப் பத்திராசிரியராகவும், இலங்கை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், இலங்கை ரூபவாஹினியில் சிறுவர் நிகழ்ச்சி நடத்துபவராகவும் பணியாற்றியிள்ளார். நகைச்சுவைப் பேச்சு, வில்லிசை, கதை கூறல், நாடகம் ஆகிய கலைகளில் ஈடுபாடு உள்ள இவர் பயங்கர இரவு, அன்பு தந்த பரிசு ஆகிய படைப்புக்களையும் உருவாக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 128-129