ஆளுமை:ஞானரெத்தினம், கனகரெத்தினம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானரெத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானரெத்தினம், கனகரெத்தினம்
தந்தை கனகரெத்தினம்
பிறப்பு 1932.02.15
ஊர் பாண்டிருப்பு, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரெத்தினம் ஞானரெத்தினம் கிழக்கு மாகாணத்தின் பாண்டிருப்பு எனும் இடத்தில் 1932 பெப்ரவரி 15ம் திகதி கனகரெத்தினத்தின் மகனாக பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு மெதடிஸ் மிஷன் தமிழ் பாடசாலை, மருதமுனை அல்மனார் பாடசாலையில் கற்று உயர்கல்வியை கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலையில் கற்றார். மேற்படிப்பை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும், பெரதேனியா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்ட இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும், திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.

மேலும் திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலயம், பாண்டிருப்பு ம.வித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் உப அதிபராக கடமை புரிந்தார். இவரால் வெளியிடப்பட்ட இலக்கிய படைப்புக்கள் கிறிஸ்தவ பக்திப் பாக்கள், மீன்பாடுந் தேனாட்டுச் செல்வங்கள் என்பனவாகும்.

இவரது படைப்புக்கள் இலங்கை வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், கனடா உதயன், செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிறிஸ்தவ வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல்கள் என்பனவற்றை தயாரித்து வழங்கியுள்ள இவர் கனடிய தமிழ் ஒலிபரப்பில் வைகறை வானம் என்னும் கிழக்கிலங்கை கலை கலாச்சார நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 94-95