ஆளுமை:ஞானரெத்தினம், கனகரெத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானரெத்தினம்
தந்தை கனகரெத்தினம்
பிறப்பு 1932.02.15
ஊர் மட்டக்களப்பு, பாண்டிருப்பு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானரெத்தினம், கனகரெத்தினம் (1932.02.15 - ) மட்டக்களப்பு, பாண்டிருப்பைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கனகரெத்தினம். இவர் ஆரம்பக் கல்வியைப் பாண்டிருப்பு மெதடிஸ் மிஷன் தமிழ்ப் பாடசாலை, மருதமுனை அல்மனார் பாடசாலை ஆகியவற்றிலும் உயர்கல்வியைக் கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலையில் கற்று மேற்படிப்பை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலயம், பாண்டிருப்பு ம.வித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் உப அதிபராகக் கடமை புரிந்தார். இவர் கிறிஸ்தவ பக்திப் பாக்கள், மீன்பாடுந் தேனாட்டுச் செல்வங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், கனடா உதயன், செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இலங்கை ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிறிஸ்தவ வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல்கள் என்பனவற்றைத் தயாரித்து வழங்கியுள்ள இவர், கனடிய தமிழ் ஒலிபரப்பில் வைகறை வானம் என்னும் கிழக்கிலங்கைக் கலை கலாச்சார நிகழ்ச்சியை நடத்திவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 94-95