ஆளுமை:பொன்னம்பலம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 13 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை பொன்னம்பலம் காரைநகர், தங்கோடையிற் பிறந்தவர். கொழும்பில் வர்த்தக தாபனத்தை உருவாக்கிய இவர் பீடித் தொழிலை இலங்கையில் முதன் முதலாக செய்து காட்டியதோடு இந்தியாவிலும் தொழில் தாபனத்தை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளித்த பெருமைக்குரியவர். இதனால் இவர் கமலா பீடிப் பொன்னம்பலம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

செல்வத்தைப் பல நற்பணிகளுக்கு பயன்படுத்திய இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியைக் கட்ட உதவினார். மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மண்டபம் ஒன்றினைக் கட்டியவர். கொழும்பில் பிரபலமாக விளங்கும் இராமகிருஷ்ண மடத்து நூல் நிலையம் இவரால் கட்டப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 365