ஆளுமை:செல்லையா, எஸ். கே.
பெயர் | செல்லையா, எஸ். கே. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ்.கே.செல்லையா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மீதும், கொழும்பு கதிரேசன் ஆலயத்தின் மீதும் அளவில்லாத பக்தி கொண்டவராக திகழ்ந்தார்.
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலில் பஞ்சாயத்து அங்கத்தவராக இருந்து பல காலம் பணியாற்றிய இவர் இக் கோவிலுக்கான இராஜகோபுரம் அமைப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவராவார். இந்தக் கோவிலின் நவக்கிரக கோயிலை முதன் முதலில் அமைத்து கொடுத்தவரும் இவரே. அத்தோடு கால்நடைகள் மீது காருண்யம் கொண்ட இவர் அவை நீர் பருகுவதற்கு வசதியாக பல குளங்களை அமைத்து கொடுத்தார்.
இவரது சேவை புங்குடுதீவுக் கிராமத்துக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. கொழும்பிலும் பல பணிகளைச் செய்துள்ளார். செக்கட்டித்தெரு கதிரேசன் கோவிலை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ததோடு அக்கோவிலின் உள் வீதியில் உள்ள வைரவர் கோவிலை தனது சொந்த செலவில் கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 259-260