ஆளுமை:குமாரசுவாமி, வை.
பெயர் | குமாரசுவாமி, வை. |
பிறப்பு | |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தியாகு வாத்தியார் என்று அழைக்கப்பட்ட வை.குமாரசுவாமி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் தனது அந்திம காலம் வரை புங்குடுதீவில் சேவையாற்றினார்.
கல்வியறிவிற் சிறந்த ஆசிரியராகவும் அதிபராகவும் விளங்கியதோடு மட்டுமல்லாமல் பிறந்த ஊர் சமயம் பற்றி நாளும் பொழுதும் சிந்தித்தவராக விளங்கினார். ஆரம்பத்தில் தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்கு பேராதரவு நல்கி தமிழின அகிம்சை போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டார்.
1950இல் இறுபிட்டி சனசமூக நிலையத்தை உருவாக்கி அன்றாட பத்திரிகைகளையும் பிறமாத வார நூல்களையும் தருவித்து வழங்கியதுடன் அதற்கு தலைவராகவும் இருந்து நீண்ட நாள் சேவையாற்றினார். அத்தோடு இறுபிட்டி ஐக்கிய நாணய சங்க செயலாளராகவும் தலைவராகவும் நீண்ட காலம் சேவையாற்றியதோடு இவர் இறுபிட்டி மூத்த நயினார்புலம் ஶ்ரீ சித்தி வீரகத்தி விநாயகர் ஆலயச் செயலாளராகவும் இருந்து ஆலய வளர்சியில் பெரிதும் ஈடுபட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 194