ஆளுமை:பொன்னம்பலம், கந்தையா (வேலணை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 10 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம் வைத்தியநாதர் கந்தையா
தந்தை வைத்தியநாதர் கந்தையா
தாய் சேதுபதி முத்துப்பிள்ளை
பிறப்பு 1908.10.26
இறப்பு 2003.03.05
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீலமணி என்று பலராலும் அறியப்படும் பொன்னம்பலம் வைத்தியநாதர் கந்தையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் இளவயதில் இவரது தந்தையார் இறந்து விட்டமையால். அன்றைய பொருளாதார நிலைமை காரணமாக கல்வியை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில் தனது தாய்மாமனுடன் வணிகத்துறையில் இணைந்து கொண்டார். பின்னர் சேதுபதி பொன்னையா காலத்தின் மாற்றம் காரணமாக காலி பிரதான வீதியில் அமைந்திருந்த வணிக நிலையத்தை தனது பெறாமகன் நாகையா அவர்களுக்கும் மருகர் பொன்னம்பலம் அவர்களுக்கும் உரித்தான முறையில் கையளித்தார். பின்னர் இவ்விருவருமே வணிக நிலையத்தை V.K.P. & S.K. Nagaiah & Co. எனப் பெயரிட்டு 1951 ஆம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக இயக்கி வந்தனர். அதாவது வேலணையில் உற்பத்தி செய்யும் புகையிலை மாத்திரமல்ல சரவணை, புளியங்கூடல் போன்ற இடக்களில் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையை கொள்வனவு செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்தனர். பின்னர் 1951 ஆம் ஆண்டு இவருக்கும் சே.க நாகையாவிற்கும் இடையே ஏற்பட்ட மனமுறிவு காரணமாக வியாபர நிலை வீழ்ச்சியுற இவ்விருவரும் நடத்திவந்த வணிக நிலையத்தை பொன்னம்பலத்திடம் கையளித்து கூட்டு வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அத்தோடு இவர் பல சமயப் பணிகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 425-429