ஆளுமை:பொன்னம்பலம், கந்தையா (வேலணை)

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, பொன்னம்பலம் கந்தையா பக்கத்தை பொன்னம்பலம், கந்தையா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ந...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம், கந்தையா
தந்தை கந்தையா
தாய் முத்துப்பிள்ளை
பிறப்பு 1908.10.26
இறப்பு 2003.03.05
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீலமணி என்று பலராலும் அறியப்படும் கந்தையா பொன்னம்பலம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்ப கல்வியை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்றார். சிறுவயதிலேயே வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்த இவர் தனது மாமனார் சேதுபதி பொன்னையா அவர்களுடன் இணைந்து காலியில் வியாபரத்தில் ஈடுபட்டார்.

பிற்பட தனது வணிக நிறுவனத்தினை மைத்துனரான நாகையா அவர்களுடன் இணைந்து V.K.P. & S.K. Nagaiah & Co. எனும் பெயரில் 1951 ஆம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக இயக்கி வந்தார். வேலணையில் உற்பத்தி செய்யும் புகையிலை மாத்திரமன்றி சரவணை, புளியங்கூடல், நாரந்தனை, அனலைதீவு முதலான இடக்களில் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையை கொள்வனவு செய்து காலியில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்தனர்.

வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் பொன்னம்பலம் அவர்கள் இறைபணி ஆற்றுதலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காலி மாநகரில் அமைந்திருந்த சிவன் ஆலயத்தின் பரிபாலன சபையில் நீண்டகாலமாக பொருளாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 425-429