ஆளுமை:இரத்தினசிங்கம், தம்பாபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:14, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரத்தினசிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினசிங்கம்
தந்தை தம்பாபிள்ளை
தாய் எலிசெபெத்
பிறப்பு 1932.02.05
இறப்பு 1995
ஊர் நாவாந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினசிங்கம், த. (1932.02.05 - 1995) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பாபிள்ளை; தாய் எலிசெபெத். இவர் தனது ஆரம்பக் கல்வியை நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பயின்றார். இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை அவர்களது அனுசரனையுடன் இந்தியாவுக்குச் சென்று வாய்ப்பாட்டு இசையையும், மிருதங்க இசையையும் கற்றார்.

இவரது மிருதங்க அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டு இசைப் புலவர் சண்முகரத்தினம் அவர்களுடைய வாய்ப்பாட்டு இசையரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இவருடைய மிருதங்க வாத்திய வித்துவத்திறமையால் இலங்கை வானொலியில் 1952ஆம் ஆண்டு நிலையவித்துவான் நியமனம் கிடைத்தது. இவர் மேடை நிகழ்ச்சிகளுடன் இலங்கை வானொலி, ரூபவாஹினி, ஆகிய நிலையங்களிலும் சிறப்புக் கலைஞராக தனி நிகழ்ச்சிகள் வழங்கியும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்தும் பாராட்டப்பெற்றார்.

இலங்கை அரசினால் இவருக்கு கலாசூரி என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 77-81