ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, தா.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:17, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலபிள்ளை, தா.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தா. பொன்னம்பலபிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தென்னிந்தியவுக்குச் சென்று திருவிதாங்கூரில் எக்சைஸ் கமிஷனர் உத்தியோகத்தில் அமர்ந்திருந்து நீண்ட காலமாக நெல்லை மாவட்டத்திலுள்ள சிவசைலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர். மலபார் குவாட்டேளி, தமிழியன் அன்ரி குவேரி முதலான ஆங்கிலச் சஞ்சிகைகளில் அநேக ஆராய்சி கட்டுரைகளை இவர் எழுதி வெளியிட்டதோடு வரலாற்றாராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர் இயற்றிய வஞ்சிமா நகர் என்னும் நூல் சிறந்த ஆராய்ச்ச்சி குறிப்புக்களைக் கொண்டதாகும்.

இவர் எழுதிய கட்டுரைகளில் மாணிக்க வாசகரும் பூர்வீக மலையாள கிறிஸ்தவர்களும், கொடுங்கோளூர்க் கோயிலின் தோற்ற வரலாறு, நாஞ்சில்நாடு செங்கோடு ஆகியவற்றின் பண்டைப் பெருமை, இரமாயணத்தின் தருமம், தென்னிந்திய பிரதிநிதித்துவச் சபைகள் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். 1911ஆம் ஆண்டிலே பாளையங்கோட்டைச் சைவ சமயாவிபிருத்திச் சபை மலரிலும் இவர் திருவிடமும் சைவமும் என்னும் தலையங்கத்துடன் ஒரு தமிழ்க் கட்டுரை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 177-178