ஆளுமை:கேசவராசா, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:23, 15 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேசவராசா, சின்னத்துரை
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1951.06.23
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.கேசவராசா (1951.06.23 - ) யாழ்ப்பாணம் நல்லுரைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆனந்த வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்று பின்னர் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னிணைப்பு பாடநெறியைப் பூர்த்தி செய்து அதன் பின்னர் அரச புகையிரத திணைக்களத்திலும், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திலும் பணிபுரிந்தார்.

பதினாறு வயதிலிருந்தே இக் கலைத்துறையில் ஈடுபட்டுவரும் இவர் சின்னமேளம், வில்லுப்பாட்டு, காவடி, கிராமிய நடனம் போன்ற நிகழ்வுகளுக்கு ஆரம்பத்தில் ஆர்மோனியம் பக்கவாத்தியமாக இசைத்து வந்ததோடு புல்லாங்குழல், வயலின் இசைக் கருவிகளை வாசிப்பதிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். அத்தோடு 1987ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றும் சை நாடகங்களுக்கு ஆர்மோனிய இசை கலைஞராகவும் பணியாற்றினார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களிலும் இவரது இசைக் கச்சேரிகள் ஒலி, ஒளி பரப்பப்பட்டது. மதுரம்ஸ் இசைக் குழுவிம் ஸ்தாபகராகவும் இவர் கடமையாற்றினார்.

'ஆர்மோனிய வித்துவான், அரங்கிசைத் திலகம், ஸ்ப்தநாத ஞானன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவை 2008ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவில் கலைஞானச்சுடர் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 122