ஆளுமை:கேசவராசா, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேசவராசா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1951.06.23
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேசவராசா, சின்னத்துரை (1951.06.23 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆனந்த வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுத் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னிணைப்புப் பாடநெறியைப் பூர்த்தி செய்தார். இவர் அரச புகையிரத திணைக்களத்திலும் இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றியுள்ளார்.

பதினாறு வயதிலிருந்து கலைத்துறையில் ஈடுபட்டு வரும் இவர், சின்னமேளம், வில்லுப்பாட்டு, காவடி, கிராமிய நடனம் போன்ற நிகழ்வுகளுக்கு பக்கவாத்தியமாக ஆர்மோனியத்தை இசைத்து வந்ததார். இவர் புல்லாங்குழல், வயலின் இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1987 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இசை நாடகங்களுக்கு ஆர்மோனிய இசை கலைஞராகப் பணியாற்றினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் இவரது இசைக் கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டது.

மதுரம்ஸ் இசைக்குழுவின் ஸ்தாபகராக விளங்கும் இக்கலைஞனுக்கு 'ஆர்மோனிய வித்துவான், அரங்கிசைத் திலகம், ஸப்தநாத ஞானன் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவை 2008 ஆம் ஆண்டு இவருக்குக் கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 122