ஆளுமை:நடராசா, சோமசுந்தரப்புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை சோமசுந்தரப்புலவர்
தாய் சின்னம்மை
பிறப்பு 1910
இறப்பு 1988.06.28
ஊர் நவாலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, சோமசுந்தரப்புலவர் (1910 - 1988) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரப்புலவர்; தாய் சின்னம்மை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்ற இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்டு கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இவர் இலங்கை வானொலியின் முதலாவது தமிழ் ஒலிபரப்பாளர் என்ற கருத்திற்குரியவராவார். கொழும்பும் சென் பெனடிக்ர் கல்லூரியிலும் கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும் இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு 1945 - 1948 வரையான காலப்பகுதிகளில் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு பகுதி நேரத் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாஹாகவி இரவீந்திரநாத தாகூரின் கீதாஞ்சலி எனும் வடமொழி நூலை தமிழுக்கு மாற்றம் செய்தமையே இவரது முதலாவது மொழிபெயர்ப்புத்துறை முயற்சி ஆகும். தொடர்ந்து மஹாகவி காளிதாசனின் மேகதூதம் எனும் நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு பல நூல்களை இவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளதோடுபல நாடகங்களை இவர் எழுதி தாமே மேடையேற்றியுமுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 243-254