ஆளுமை:சந்திரகௌரி, சிவபாலன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரகௌரி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரகௌரி சிவபாலன்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகௌரி சிவபாலன் மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர் பின்பு பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக "இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும், பிரதேசப் பண்பும்" எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமப்ர்ப்பித்தார். ஆசிரியராகவும், நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் பின் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்தார்.

தனது பெயரின் முதலெழுத்தான 'கௌ' வையும், தனது கணவர் சிவபாலனின் பெயரில் முதலெழுத்தான 'சி'யையும் இணைத்து 'கௌசி' எனும் புனைபெயரில் புலம்பெயர் நாட்டில் இவர் ஆக்கங்களைப் படைத்து வந்துள்ளார். இவரது முதலாவது படைப்பு 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், 'யானை உரியும் உமையாள் அச்சமும்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள் ஆன்மீக சிந்தனைகள் பாடல்கள் போன்ற ஆக்கங்களை இவர் இலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், மண், தமிழ்நாதம்| போன்ற சஞ்சிகைகளிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 93-95