ஆளுமை:சங்கரப்பிள்ளை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கரப்பிள்ளை, ஆறுமுகம்
தந்தை ஆறுமுகம்
தாய் கற்பகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ. சங்கரப்பிள்ளை காரைநகரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் கோவிந்தர் ஆறுமுகம், தாயார் விசுவர் சண்முகத்தின் மகள் கற்பகம். சங்கரப்பிள்ளை படிப்பில் நாட்டமின்றி தொழில் விருப்புடையவராக இருந்தமையால் சிறிய தகப்பனார் ஓவசியர் சிதம்பரப்பிள்ளையின் கீழ் ஓவசியராக சில காலம் பணிபுரிந்தார்.

பின் கொத்திராந்து வேலையில் ஈடுபட்ட இவர் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றின் கொத்திராந்தினைத் தன் பொறுப்பில் எடுத்து சீராக நடத்தி வந்தார். இதன் காரணமாக கோடீஸ்வரரான சங்கரப்பிள்ளை காரைநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவர்.

இவரின் உதவியினால் பல ஆலயக் கட்டிடங்களும், பள்ளிக்கூடங்களும் எழுந்துள்ளன. இதன் பின் அச்சகத்தொழிலில் ஏற்பட்ட ஆர்வம் 1947ல் நிறைவேறியது. ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ரைம்ஸ் ஒஃவ் சிலோன் என்ற தாபனத்தை வாங்கி அதன் பணிப்பாளர் சபைத் தலைவராக இருந்தார். இதனால் அவருக்கு ரைம்ஸ் சங்கரப்பிள்ளை என்ற பெயர் வந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 354-356