ஆளுமை:வேலாயுதம், கனகசபை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலாயுதம்
தந்தை கனகசபை
தாய் தங்கம்
பிறப்பு 1917.11.17
இறப்பு 2009.05.19
ஊர் தம்பலகாமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம், கனகசபை (1917.11.17 - 2009.05.19) திருகோணமலை, தம்பலகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், நிருபர் (வீரகேசரி பத்திரிகை). இவரது தந்தை கனகசபை; தாய் தங்கம். இவர் சிறுவயது முதலே இசை, நாடகம், கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5 ஆம் வகுப்புக்கு மேல் தொடரமுடியாது போனது. இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்தது. இவர் ஆர்மோனியம் வாசிப்பவர். வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1008 பக்கங்கள் 11-29

வெளி இணைப்புக்கள்