ஆளுமை:சச்சிதானந்தன், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தம், க.
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1921.10.21
இறப்பு 2008.03.21
ஊர் மாவிட்டபுரம், கங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தம், கணபதிப்பிள்ளை (பி. 1921.10.21 - 2008.03.21) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் தெய்வானைப்பிள்ளை. மகாவித்துவான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்ற இவர் காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலையும் சோதிடத்தையும், சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியையும் பயின்றார். இவர் மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றதோடு 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர். 1946 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு புனித மேரி கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1947-1948 காலப்பகுதியில் உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவரது முதல் சிறுகதை "தண்ணீர்த்தாகம்" 1939 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் நாள் ஈழகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய இவரது எட்டுச் சிறுகதைகள் 1939-1944 காலகட்டத்தில் ஈழகேசரியில் வெளிவந்தன. ஆய்வுத்துறையில் மிகுந்த ஆர்வம்கொண்ட இவர் எழுதிய"தமிழர் யாழியல்" என்ற நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதைப் பெற்றது. ஆனந்தத்தேன், எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் ஆகிய கவிதைகளையும், தியாக மாமலை வரலாறு, யாழ்ப்பாணக்காவியம், தமிழர் யாழியல், மஞ்சு காசினியம், Fundamentals of Tamil Prosodyஇலங்கைக்காவியம் பருவப் பாலியர் படும்பாடு, மஞ்சு மலர்க்கொத்து, ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்

சாகித்திய ரத்ன, சம்பந்தன் விருது, வட கிழக்கு மாகாண ஆளுநர் விருது, தந்தை செல்வா நினைவு விருது, இலங்கை இலக்கியப்பேரவை விருது, கலாகீர்த்தி தேசிய விருது ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 521
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 105-109
  • நூலக எண்: 3799 பக்கங்கள்