பகுப்பு:பாடும் மீன்

From நூலகம்

பாடுமீன் இதழானது 1967 களில் தமிழில் வந்த மிகவும் தரமான இலக்கியச் செழுமை மிக்க இதழாகக் காணப்படுகின்றது. இதன் பிரதம ஆசிரியராக அக்காலத்தின் புகழ்பெற்ற கவிஞர் நீலாவணன் அவர்கள் காணப்படுகின்றார். இது கிழக்கிலங்கையின் கல்முனை, பெரிய நீலாவணையினைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய இரு திங்கள் இதழாகும். அவ்வகையில் இதன் ஆக்கங்களாக நன்கு தேர்ந்தெடுக்கப் பட்ட , இலக்கியத் தரம் வாய்ந்த, தூய தமிழில் அமைந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கேள்வி பதில்கள் மற்றும் ஓவியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. அக்கால கட்டத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களே இதில் தமது படைப்புக்களை சங்கமித்துள்ளனர்.

Pages in category "பாடும் மீன்"

This category contains only the following page.