பகுப்பு:நெய்தல் (நோர்வே)

From நூலகம்

நெய்தல் சஞ்சிகையானது 2003 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வேயைக் களமாகக் கொண்டு வெளிவந்த ஒரு இலக்கியப் பல்சுவை இதழாகக் காணப்படுகின்றது. இதன் மலராக்கக் குழுவில் யூலியஸ் அந்தோனிப்பிள்ளை, அருமைராஜா ஆரோக்கியசீலன் மற்றும் பாபு மைக்கல்ராஜா ஆகியோர் கடமையாற்றியுள்ளனர். இதனை நோர்வேயிலுள்ள நாவாந்துறை புனித மரியாள் அபிவிருத்திச்சபை வெளியீடு செய்துள்ளது. வாசகர்களிடையே எழுத்துத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்க்கும் மற்றும் அவர்தம் படைப்புக்களை வெளியுலகிற்குக் கொண்டு செல்லும் நோக்குடனும் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மழலைகள் முதல் முதியோர் வரைக்கும் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இவ்விதழ் ஆக்கங்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளது.

Pages in category "நெய்தல் (நோர்வே)"

This category contains only the following page.