பகுப்பு:செங்கதிர் (யாழ்)

From நூலகம்

செங்கதிர் சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து 1970 காலப்பகுதிகளில் வெளிவந்த மாத இதழாகும். இதன் ஆரம்பத்தில் பிரதம ஆசிரியராக குமாரசூரிய விளங்கினார். ஆசிரியராக கே. இந்திரபாலா செயற்பட்டார். பின்னைய காலங்களில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர், உதவியாசிரியராகக் கடமையாற்றியுள்ளனர். இது அக்காலத்திலேயே 60 பக்கங்களைக் கொண்ட கணினி தட்டச்சு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பல்சுவை சார்ந்த இதழாக இது வெளி வந்தது. இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சட்டவியல், விஞ்ஞானம், அறிவியல், கலை, சினிமா, ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.