பகுப்பு:சிந்தனை (பேராதனை)
From நூலகம்
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினைக் களமாகக் கொண்டு 1967 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த சமூக அறிவியல் காலாண்டு இதழாக சிந்தனை வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப கால ஆசிரியராக க. அருமைநாயகம் அவர்கள் காணப்பட்டார். பின்னைய காலங்களில் கா. இந்திரபாலா அவர்கள் காணப்பட்டார். இவர்களிருவரும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினைச் சேர்ந்தவர்கள். இதனைக் குறித்த பல்கலைக்கழகத்தின் கலைக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலைகள், புவியியல், சமூகவியல், மொழியியல், வரலாறு, இலக்கியம், நூல் விமர்சனம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "சிந்தனை (பேராதனை)"
The following 10 pages are in this category, out of 10 total.