பகுப்பு:சப்தம்

From நூலகம்

சப்தம் இதழ் 2011 இல் நெடுந்தீவில் இருந்து வெளிவந்தது. நெடுந்தீவில் இருந்து வெளிவந்த முதலாவது கலை இலக்கிய இதழாக இந்த இதழ் தன்னை பிரகடனப் படுத்தியுள்ளது. மாதாந்த கலை இலக்கிய சஞ்சிகையான சப்தம் இதழின் ஆசிரியர்களாக க.யோகேஸ்வரன், எம்.கலைவாணி, செ.மோகன்ராஜ் விளங்கினார்கள். கவிதை கட்டுரைகள் வாழ்த்து செய்திகள் தாங்கி இந்த இதழ் மலர்ந்தாலும் கவிதைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இந்த இதழில் வெளியாகிய பல ஆக்கங்கள் இதழ் ஆசிரியர்களால் படைக்க பட்டவை. நெடுந்தீவு பிரதேசத்தை முன்னிலை படுத்தி இந்த இதழ் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 2 இதழ்களின் வருகையோடு இந்த இதழ் தனது வருகையை நிறுத்தி கொண்டது.

Pages in category "சப்தம்"

This category contains only the following page.