பகுப்பு:கலைப்பூங்கா

From நூலகம்

கலை பூங்கா இதழ் இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1963 ஆம் ஆண்டில் வெளியீடு செய்ய ஆரம்பிக்க பட்டது. ஆண்டுக்கு இருமுறை மலரும் இந்த இதழின் ஆசிரியர்களாக ஆ. சதாசிவம் அவர்களும் சோ.இளமுருகனாரும் ஆரம்ப இதழ்களுக்கு ஆசிரியர்களாக இருந்தனர். சோ. இளமுருகனார் விலக செ.துரைசிங்கம் அவர்கள் ஆ .சதாசிவத்துடன் இணைந்து கொண்டார். இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் தாங்கி வந்தாலும் கட்டுரைகளை பிரதானப் படுத்தியே இந்த இதழ் வெளியானது. பழம் இலக்கியங்களை முன்னிலை படுத்திய கட்டுரைகள் இதில் வெளிவந்தன. மிக காத்திரமான கட்டுரைகளாக இவை அமைந்திருந்தன.