பகுப்பு:உள் ஒளி
From நூலகம்
உள் ஒளி இதழானது யாழ்ப்பாணம் புங்குடு தீவினைக் களமாகக் கொண்டு மார்கழி 1968 இல் வெளிவர ஆரம்பித்தது . இதன் ஆசிரியர்களாக மு.பொன்னம்பலம், மு.தளையசிங்கம் ஆகியோர் காணப்படுகின்றனர். புங்குடு தீவு சர்வ மத சங்கம் இந்த இதழை வெளியீடு செய்துள்ளது. அக்கால கட்டத்தில் ஈழத்து ஆத்மீக- கலை- இலக்கிய வட்டாரத்தில் இது ஒரு புதிய முயற்சியாக, ஆத்மீகம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஓர் மறுமலர்ச்சியை எழச்செய்து அரசியல், சமூக, பொருளாதாரம் ஆகிய பிற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் மு.பொ மற்றும் மு.த. வின் ஆக்கங்களு, புனைபெயரில் வெளியான ஆக்கங்களுமாக. இலக்கியம் சார்ந்த விடயங்களைத் தாங்கிய இதழாக இது காணப்படுகின்றது.