பகுப்பு:வான் முழக்கம்

From நூலகம்

வான் முழக்கம் இதழானது யாழ்ப்பாணம், கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இதுவொரு காலாண்டுப் பல்சுவை இதழாகும். இதன் ஆசிரியராக வே.தவச்செல்வம் அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்காலகட்டத்தில் தமிழர்களின் கலை, கலாசார, சமூகபொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக உலகமயமாக்கல், கவிதைப்பகுதி, பாரம்பரிய விடயங்கள், அரசியல் விடங்கள், தகவல் தொழினுட்பம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.