பகுப்பு:பூவிழி

From நூலகம்

பூவிழி இதழானது 90களின் ஆரம்பத்தில் இருந்து கல்முனையைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு முத்திங்கள் சிற்றேடாக வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் முஹமட் அபார், கதீர், றிஸ்வியூ முஹம்மத் நபீல் மற்றும் எஸ் நஜீமுத்தீன் ஆகியோர் விளங்கினார்கள். கல்முனை பூவிழி கலை இலக்கிய வட்டம் இதனை வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கத்தில் கவிதைகளே பெரும் பகுதிகளாகக் காணப்படுகின்றன. அவை உள்நாட்டுக் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைகளாயும் உள்ளன. அத்துடன் ஆரோக்கியமான சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகியுள்ளது.

Pages in category "பூவிழி"

The following 2 pages are in this category, out of 2 total.