பகுப்பு:பசுமை

From நூலகம்

பசுமை இதழானது 2016 ஆம் ஆண்டு தொடக்கம் வவுனியாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த காலாண்டு சஞ்சிகையாக காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை இதழாகும். நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மனிதரை ஆட்கொண்டுள்ள இன்றைய காலச்சூழலில் சமூகத்தில் வாசிப்பையும் ஆர்வத்தையும் தூண்டி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப இதழின் ஆசிரியராக மிதயா கானவி அவர்களும், இணையாசிரியராக வே. முல்லைத்தீபன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு வருகையுடன் தடைப்பட்டு மீண்டும் 2021 ஆண்டில் புதுப்பொலிவுடன் வருகை கண்டுள்ளது. புதுவரவின் நிர்வாக ஆசிரியராக ந.தயாபரன் அவர்களும், இதழாசிரியராக நா. பார்த்தீபன் அவர்களும் காணப்படுகின்றனர். இதனை பொய்கை வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், கலாசாரம், விவசாயம், மருத்துவம் மற்றும் வாழ்வியல் என பல்துறை சார்ந்த விடயங்களும் காணப்படுகின்றன.

Pages in category "பசுமை"

The following 4 pages are in this category, out of 4 total.