பகுப்பு:துகிலிகை
From நூலகம்
துகிலிகை இதழானது ஒரு காலாண்டு ஓவிய சஞ்கிகையாகும். 2005 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக திரு.க.ரட்ணேஸ்வரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இணையாசிரியராக திருமதி பப்சி மரியதாசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சித்திரக்கலைத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அக்காலகட்டத்தில் சித்திரத்திற்கென நூல்கள் இல்லையே என்ற எண்ணம் நீக்கி வண்ண வடிவமாக இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் முழுவதும் அழகியற்றுறை சார்ந்த விடயப்பொருள்களாகவே காணப்படுகின்றன.