நிறுவனம்:யாழ்/ காரைநகர் ஆண்டிக்கேணி ஐயனார் கோயில்
Name | யாழ்/ காரைநகர் ஆண்டிக்கேணி ஐயனார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
ஆண்டிக்கேணி ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. வியாவில் ஐயனாரை தரிசிக்க வந்த ஆண்டி எனும் பெரியார் ஒல்லாந்தரால் அழிக்கப்பட்ட ஐயனார் ஆலயத்தை தரிசிக்க முடியாமல் வேதனை அடைந்தபோது ஐயனார் அவருக்கு கனவிலே காட்சி அளித்து தான் ஊருக்கு வடக்கே திண்ணைக்களி என்னும் மேட்டு நிலத்திலே இருப்பதாக கூறியதாகவும், ஆண்டிப்பெரியார் அங்கு சென்று தான் கொண்டுவந்த சூலத்தை அரசமரத்தடியில் நாட்டி வழிபாடு செய்து ஐயனாரது திருவுருவை தேடி தோண்டி எடுத்து அரசமரத்தடிக்கு அண்மையில் வைத்து அங்கே கேணியும் பூந்தோட்டமும் அமைத்து பூஜை செய்ததாகவும் ஆலய வரலாறு கூறப்படுகின்றது.
ஆண்டி முனிவர் சிவபதமடைந்த பின்னர் அவர் கூறியவாறு திண்ணைக்களிக்கு சொந்தக்காரரான அம்பலவி முருகன் என்பவர் அடியவர்களின் உதவியுடன் ஆலயத்தை செவ்வனே அமைத்தார். முதற்கும்பாபிஷேகம் ஏறத்தாழ 210 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பலவி முருகரால் நடாத்தப்பட்டது. ஆனி உத்தரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு மகோற்சவம் 10நாட்கள் நடைபெற்று வந்தது. காலக்கிரமத்தில் இது பங்குனி உத்தரமாக மாற்றப்பட்டது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 141-152