நிறுவனம்: வணிகப் பொருளியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
பெயர் | வணிகப் பொருளியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
வகை | - |
நாடு | - |
மாவட்டம் | - |
ஊர் | - |
முகவரி | - |
தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வணிகப் பொருளியல் மன்றமானது எமது வணிகப் பொருளியல் மன்றமானது மாணவர்களிடையே வணிகஅறிவை வளர்க்கவேண்டும் என்பதையே நோக்கமாகத் கொண்டு இயங்கி வருகிறது. இம் மன்றத்தின் செயற்பாடுகளில் சில உதாரணங்கள்.
இம் மன்றம் வருடம்தோறும்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், ஆகியோரை அழைத்து கருத்தரங்குகளை மாணவர்களுக்காக நடாத்தி வருவது வழக்கம்.
அத்தோடு இலங்கை பங்குமுதற்சந்தை உறுப்பினரால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட பங்குச்சந்தை தொடர்பான நேரடி கருத்தரங்குகளிலும் பங்குபற்ற வைப்பதன் மூலம் மாணவர் பயனடைகின்றனர்.
அத்துடன் வணிகவள நிலையத்தால் நடாத்தப்படும் போட்டிகளில் பரிசில் களைப் பெற்றுக்கொள்ளச் செய்கிறது.
பாடசாலை மட்டத்திலும் பொதுஅறிவுப் போட்டிகளை நடாத்தி திறமையான மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
ஆண்டு தோறும் வணிகத்தினவிழாவையும் சிறப்பாக நடாத்தி வருகிறது.
இவ்வருடம் வணிக மன்றம் முதன்முதலாக மலரை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதன் மூலமும் விளம்பர நிதி உதவிகள் மூலமும் பல்வேறு வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் பெறும் நிதி உதவியால் வணிக வனிதை என்னும் சஞ்சிகையை வெளியிட்டுவருகின்றது.
தரம் 10, 11 மாணவர்களிடையே பாடசாலை மட்டத்தில் குறுவினாவிடைப் போட்டிகள் நடாத்தப்பட்டு வணிகக்கல்வி செவ்வனே கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். போட்டி முடிவுகளிற்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன..