நிறுவனம்:யாழ்/ வேலணை பெருங்குளம் காசிவிஸ்வநாதர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ வேலணை பெருங்குளம் காசிவிஸ்வநாதர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வேலணை |
Address | வேலணை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வேலணை பெருங்குளம் காசிவிஸ்வநாதர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. இவ் ஆலயமானது நால்வர் மடச் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ் ஆலயத்தின் மூலவராக அம்பாள் வீற்றிருக்கிறார். இம் மூலமூர்த்தியானது சிவகாமி அம்பாள் சமேத நடேசப்பெருமான் என அழைக்கப்படுகின்றது.
வேலணை மேற்கைச் சேர்ந்த செல்லப்பா என்பவரால் நால்வர் மடம் என்ற பெயரில் மடாலயக் கோவில் அமைத்து சிறப்பாக நடத்தி வந்தார். ஆரம்ப காலங்களில் இவ் ஆலயத்தில் மூன்று காலப் பூசைகள் இடம்பெற்ற போதும் 1990களில் ஏற்பட்ட யுத்த இடப்பெயர்வுகளால் மடாலயம் சேதமானது. இதனால் ஆலய பரிபாலன சபையினர் நடராசர் பெருமானையும் மற்றைய பொருட்களையும் எடுத்து பெருங்குளம் அம்மன் கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 179-180