ஓடிப் போனவன்
ஓடிப் போனவன் | |
---|---|
| |
Noolaham No. | 317 |
Author | நவசோதி, கணபதிப்பிள்ளை |
Category | சிறுவர் இலக்கியம் |
Language | தமிழ் |
Publisher | தமிழ்ச் சங்கம்-கண்டி |
Edition | 2003 |
Pages | 80 |
To Read
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
இலங்கையின் முதலாவது நவீன சிறுவர் நாவல் என்று கருதப்பட்ட இது புத்தொளி வெளியீடாக 1968இல் முதற் பதிப்பைக் கண்டது. வீட்டை விட்டு ஓடிச்செல்லும் வசந்தன் என்ற சிறுவனின் பாத்திரத்தின் வாயிலாக தாய்ப்பாசம், பிறர்க்குதவி செய்தல், செய்த தவறுக்காக மன்னிப்பைக் கோரல் தனக்காக பிறர்படும் துன்பத்தைத் தாங்காமை போன்ற பண்புகளை உணர்த்தி நிற்கும் இந்தநாவல், மாணவர்களுக்கான நல்லொழுக்க போதனைகளைத் தரும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்டது. பேராதனைப் பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியான அமரர் கணபதிப்பிள்ளை நவசோதி (2.4.1941-4.1.1990) கதைப்பூங்கா என்ற பல்கலைக்கழக சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராக இருந்ததுடன், வெண்ணிலா, தமிழோசை, சிந்து (லண்டன்) ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர். விரிவுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, சுவடித் திணைக்கள நெறியாளராக, அகழ்வாராய்ச்சியில் நாட்டம் கொண்டவராக, நூலகராக, ஒலிபரப்பாளராகவென்று பல்வேறு பரிமாணங்களில் நின்று தன்னை இனம்காட்டியவர்.
பதிப்பு விபரம்
ஓடிப்போனவன். க.நவசோதி. கண்டி: கண்டி தமிழ்ச் சங்கம், த.பெ.எண். 32, 2வது பதிப்பு, டிசம்பர் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 1968. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், 48B, புளுமெண்டால் வீதி).
80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5 *12 சமீ. (ISBN 955 9084 19 6).
-நூல் தேட்டம் (2442)