ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் | |
---|---|
| |
Noolaham No. | 100 |
Author | சதாசிவம், ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | இலங்கை சாகித்திய மண்டலம் |
Edition | 1966 |
Pages | xxxii + 585 |
To Read
- ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள்.
பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம். ஆ.சதாசிவம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 7: சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1966. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxxii + 585 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*13.5 சமீ.
-நூல் தேட்டம் (# 3411)