இன்னொன்றைப் பற்றி
இன்னொன்றைப் பற்றி | |
---|---|
| |
Noolaham No. | 019 |
Author | சிவசேகரம், சிவானந்தம் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | தேசிய கலை இலக்கியப் பேரவை |
Edition | 2003 |
Pages | viii + 51 |
To Read
- இன்னொன்றைப் பற்றி (118 KB)
- இன்னொன்றைப் பற்றி (1.32 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.
பதிப்பு விபரம்
இன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.
-நூல் தேட்டம் (தொகுதி 5)