ஆளுமை:வீரசிங்கம், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வீரசிங்கம் நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
தாய் சின்னம்மா
பிறப்பு 1928.05.15
ஊர் வேலணை
வகை சமூக சேவையாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைச்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வீரசிங்கம் நாகலிங்கம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கல்வியில் காட்டிய திறமை காரணமாக ஆசிரியர் அப்பாத்துரை இவருக்கு வீரசிங்கம் எனும் பட்டபெயரைச் சூட்டினார். காலப்போக்கில் துரைச்சாமி என்ற பெயர் விலகி வீரசிங்கம் என்ற பெயரே நிலைத்து நின்றது. வேலணை கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இவர் இருந்து கைத்தனை வீதியை அகலமாக்கியமை, புதிய பல வீதிகள் திறந்தமை, வங்களாவடியில் பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு இடம் வகுத்து கொடுத்தமை போன்ற பல செயல்களை செய்து முடித்ததோடு இக்காலத்தில் உருவான சிங்களம் மட்டும் என்ற சட்டத்திற்கு எதிராக தந்தை செல்வா வழியில் நின்று அச் சட்டத்தை எதிர்த்தார். பின்னர் 1960ஆம் ஆண்டு கிராமச் சபை தேர்தலில் போட்டியிட்டு கிராமச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு பயிர் செய்கை குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீர்ப்பாசன தேவையை நிவர்த்தி செய்வதற்கு குளங்ளை புணரமைத்தல், வாய்க்கால் கட்டியமை போன்ற பல வேலைகளை செய்து முடித்தார். 1986ஆம் ஆண்டில் பண்ணை வீதியில் உள்ள ஓர் இடத்தில் இராணுவம் குடிகொண்டதால் தீவுப் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு இராணுவன் அனுமதியலிக்கவில்லை ஆதலால் அராலியால் போக்குவரத்து செய்ய தீர்மாணிக்கப்பட்டு இவர் தலைமையில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 528-531