ஆளுமை:வாசுகி, ஜெகதீஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாசுகி ஜெகதீஸ்வரன்
தந்தை சண்முகம்பிள்ளை
தாய் விஜயலஷ்மி
பிறப்பு 1957.03.19
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெ. வாசுகி (1957.03.19 - ) கொழும்பைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; தாய் விஜயலஷ்மி. இலங்கையில் தனது கல்விப் பயிற்சியை முடித்த பின்னர் நாட்டியக் கலையின் பல்வேறு வடிவங்களையும் தஞ்சாவூரின் ஶ்ரீமதி ஜெகதாம்பாள், பத்மஶ்ரீ அடையார் லக்‌ஷ்மணன், சாந்தா தனஞ்சயன், கலைமாமணி இராஜரத்தினம்பிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் பரதசூடாமணி நடனத்திலும், நட்டுவாங்கத்திலும் டிப்ளோமா சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இலங்கையின் பல பாகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் தனி நிகழ்ச்சிகளை அளித்து பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். 1985ஆம் ஆண்டில் பங்களாதேஷ், டாக்கா நகரில் நடைப்பெற்ற தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் (SARC) மாநாட்டில் நடன நிகழ்ச்சியை அளிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 1986ஆம் ஆண்டில் கனடா நாட்டின் வன்குவார் நகரில் நடைப்பெற்ற எக்ஸ்போ (EXPO) கண்காட்சியில் நடைப்பெற்ற இவரது நிகழ்ச்சி அரங்கேறியது.

சக்தி, கிருஷ்ணாமிர்தம், நடேஷ்வர அஞ்சலி, ஏழுவகைத் தாண்டவம், திருநாவுக்கரசர், சித்திரைப் பெண், அஷ்டலக்‌ஷ்மி, நவசக்தி, வசந்தோற்சவம், சிற்பியின் கனவு, சகுந்தலை, நள தமயந்தி மீனாட்சி கல்யாணம், தைத்திருநாள், தீபாவளி வந்தது, மனிதனின் ஏழு பருவங்கள், சாவித்திரி, கண்ணகி, சாந்த சொரூபி, தமிழ் அன்னைக்கு அனிகலன்கள், சிவதரிசனம், வானவில்லின் வர்ணங்கள் ஏழு என்பர், ஆனால், பரதநாட்டியக் கலை வானில் முதலான கலைக்கோலங்களை தாமே தயாரித்து நெறிப்படுத்தியுள்ளார்.

கலைத்துஐயில் இவரது ஆளுமைகளையும், இவராற்றிய சேவைகளையும் பாராட்டி இலங்கை அரசின் 'கலாசூரி', விருதும் பரத பூஷண திலகம், நர்த்தன நாயகி, நடனக் கலையரசி, கலைச்செம்மல், இரத்தின தீபம் ஆகிய கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 88-95