ஆளுமை:வள்ளிநாயகி, இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வள்ளிநாயகி, இராமலிங்கம்
தந்தை சின்னத்தம்பி
தாய் செல்லமுத்து
பிறப்பு 1933.01.09
இறப்பு 2016.09.15
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வள்ளிநாயகி, இராமலிங்கம் (1933.01.09 - 2016.09.15) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியை, விரிவுரையாளர் (ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி), பதில் அதிபர் (அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி). இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லமுத்து. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' 1955 அளவில் ஈழகேசரியில் பிரசுரமானது.தொடர்ந்து குறமகள் என்னும் புனைபெயரில் வாழ்வைத் தேடு, பிரிவும் இன்பம் தரும், ஆளுமைகள் அழிகின்றன, ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது, அவள் கொடுத்த விலை, வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும் உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய இவரது நூல்கள்.



இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 33-38
  • நூலக எண்: 10203 பக்கங்கள் 23-25
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 104-105
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 30
  • நூலக எண்: 10203 பக்கங்கள் 23-25