ஆளுமை:வனஜா, ஜெகதீஸ்வரன்

From நூலகம்
Name வனஜா
Pages சித்திரவேலு
Pages இராசமணி
Birth 1953.01.30
Place மட்டக்களப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வனஜா, ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சித்திரவேலு; தாய் இராசமணி. ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் இடைநிலை, உயர் கல்வியை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றார். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரத்தை முடித்துள்ளார். சங்கீத ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். திருகோணமலை வலயக் கல்வியியல் வளாகத்தில் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இசை நாடகங்களை இவரே இசையமைத்து மேடையேற்றியுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு வனஜா, ஜெகதீஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.