ஆளுமை:பாத்திமா, சிம்னாஸ்

From நூலகம்
Name பாத்திமா
Birth
Place புத்தளம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா, சிம்னாஸ் புத்தளத்தில் பிறந்த எழுத்தாளராவார். ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிரா ஆரம்ப முஸ்லிம் பாடசாலையிலும் தொடர்ந்து புத்தளம், கொ/முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு பு/செய்னப் ஆரம்ப முஸ்லிம் பெண்கள் பாடசாலை , பு/பாத்திமா மகளிர் கல்லூரி, உயர்தரக் கல்வியை பு/ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியிலும் கற்றார். றைஸாஹீனா என்னும் புனைபெயரிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரின் பெற்றோரும் சமூக சேவையாளர்களாவர்.

சிறுவயது முதலே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இவரின் கவிதைகளை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். பொற்தூவல் கவிதை நூலானது இவரின் 60 கவிதைகளை தாங்கி வெளிவந்துள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாடகம், நாவல் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். செவ்வாயில் ஓர் இரவு எனும் இவரின் அடு்த்த நாவல் வெளிவரவுள்ளது. அறிவிருட்சம் எனும் பத்திரிகையை இவரின் தந்தையுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார்.